complaint for commissioner office egmore chennai
அனுப்புநர்: வீ.விவேக். த/பெ. மா.வீரையன். காலணித் தெரு- கடம்பூர் அரியலூர் மாவட்டம். பெறுநர்: THE COMMISSIONER OF POLICE GREATER CHENNAI POLICE, Egmore, Chennai-600008 பொருள்: சம்பளத் தொகையினை பெற்றுத் தரும்படி புகார் மனு அய்யா, வணக்கம். நான்,எம்.சிஏ, முடித்துள்ளேன். சென்னையில் நெ.138/2 கோவிந்தப்ப நாயக்கண் தெருவில் இயங்கிக் கொண்டிருக்கும் மகாவீர் கேபிள் ஏஜென்சியில் நண்பரின் அறிமுகத்தோடு அலுவலக கணக்காளராக 03/04/2013 ல் பணியில் சேர்ந்தேன். எனக்கு ஆரம்ப சம்பளம் ரூ.15000/- தருவதாக கூறி ஒரு மாதம் முடிந்த பிறகு உன் திறமைக்கேற்றவாறு சம்பளம் உயர்த்தி தருகிறேன் என்று உரிமையாளர் திரு.குஷால் ஜெயின் கூறினார். மறு மாதத்தில் சம்பளம் கேட்டபோது ரூ.2500/- அதிகமாக தருகிரேன், என்றும்,உனக்கு மொத்தமாக சம்பளம் தருகிரேன் என்று கூரியதை நான் ஏற்றுக் கொண்டேன். தினமும் ரூ.100/- உணவுக்காக கொடுத்து வந்தார்.இத்தொகை சம்பளத்தில் பிடித்தம் இல்லை என்று கூரினார். தொடர்ச்சியாகவும் சம்பளம் வாங்காமலும் வேலை பார்த்து வந்தேன். என்னிடம் அன்பாக நடந்து கொண்டார்கள். என் குடும்ப சூழ்நிலையை அவரிடம் கூரினேன். என்னை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டார். தீபாவளிக்கு முன்பாக 17,18/10/2013 ல் இரண்டு நாட்களாக உடல்னிலை சரியில்லாமல் வேலைக்கு செல்ல வில்லை. நான் ஊருக்கு போவதாக கூறி சம்பளம் கேட்டபோது உரிமையாளர் திரு குஷால் ஜெயின் அவர்கள் கணக்கு பார்த்து சம்பளம் ரூ.1,20,000/- மற்றும் தீபாவளி போனஷ் ரூ.15,000/- ஆக ரூ.1,35,000/- காசோலையக கொடுத்தார். சம்பள விபரம்: ஏப்ரல் மாதம் 15000, மே முதல் அக்டோபர் 17500, தீபாவளி போனஷ் 15000, பணமாக கேட்டபோது பஸ் செலவிற்கு ரூ.1000/-கொடுத்தார். காசோலையில் தொகை ரூ.1,35,000/- மற்றும் கையெழுத்து மட்டும் போட்டு கொடுக்கச் சொல்லி வாங்கிட்டு வந்தேன். 22/10/2013 ல் அரியலூர் யூனியன் வங்கியில் கலக்ஷன்ல காசோலையை போட்டேன்.23/10/2013 உங்கள் காசோலையில் பணம் நிருத்தி வைக்கப்பட்டுள்ளது. உங்க காசோலையை வாங்கி செல்லும்படி போன் செய்தார்கள். இச் செய்தியை கேட்டதும் எனக்கு பெரும் அதிர்சி ஆகிவிட்டது. உடனே எனது உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது “நி அவ்ள பெரிய ஆளா” நேர்ல வா பேசிக்ளாம் என்று மிரட்டி பேசினார். அவருடைய பேச்சு வார்த்தை எனக்கு மேலும், பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியது. அதனால் மத்திய அரசின் இரயில்வே துறை எழுத்து தேர்வு (27/10/2013)ல் சென்னையில் (தாம்பரம்) இருந்தது. நான் பயத்தின் காரணமாக செல்லவில்லை. ஆகவே தக்க நடவடிக்கை எடுத்து, எனது சம்பளத் தொகையினை பெற்றுத் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு
No signatures yet. Be the first one!
Comment