Vijayakumar Dhayalan TAMILNADU 0

பீட்டவை தடை செய்ய 100000 கையெழுத்து போராட்டம்!

11340 people have signed this petition. Add your name now!
Vijayakumar Dhayalan TAMILNADU 0 Comments
11340 people have signed. Add your voice!
12%
Maxine K. signed just now
Adam B. signed just now

ஜல்லிக்கட்டுஇது மாட்டைப் பற்றிய பிரச்சினை அல்ல!நாட்டைப் பற்றிய,தனிமனிதனை பற்றிய பிரச்சினை.

ஜெர்சி பால் எனும் உயிர்க்கொல்லி!*இன்று நாம் குடிக்கும் பால் அனைத்துமே நஞ்சு! *ஜெர்சி என்பது மாடு அல்ல!

ஜெர்சி மாட்டின் பால் மாட்டுப் பாலே அல்ல!அது மாமிசத்திற்காக அமெரிக்காவில் வேட்டையாடப்படும் உருஸ்(Urus) என்ற கொடிய விலங்கின் மரபு வழி மாற்றம் செய்யப்பட்ட கலப்பின விலங்கான ஜெர்சி மாட்டின் பால் என்பது பல பேருக்குத் தெரியாது.ஜெர்மனியில் அந்த விலங்கு ஆரோச்ஸ்(Aurochs) என்று அழைக்கப்படுகின்றது.மாமிசத்திற்காக அந்த விலங்குகளை வேட்டையாடச் சிரமப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்திய வம்சாவளி மற்றும் உலகத்திலுள்ள பல நாட்டு மாடுகளோடு உருஸ் என்ற விலங்கை மரபியல் மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட கொடிய வகை விலங்குகளே ஜெர்சி,ஹால்ட்ஸ்டின், எப்.எஸ் வகை உயர்ரக மாடுகள்.நாக்குக்குச் சுவையாக மாமிசமும் உயிருக்கு உலை வைக்கக் கூடிய பாலையும் தருவதே அவர்கள் எண்ணம். பால் குடித்து பாதிக்கப்படும் மக்கள் மீண்டும் உடல் குணமடைய ஆங்கிலேயச் சீமான்களின் சொந்தத் தயாரிப்பு மருந்துகளை வாங்க வரிசையில் நிற்க வைப்பதும் அவர்களின் திட்டம்.

இந்த உயிர்க்கொல்லி மாடுகளின் பாலில் கேசோமார்பின்(Casomorphine) என்ற நச்சு அதிக அளவில் கலந்துள்ளது.ஆகையால் ஐரோப்பிய நாடுகள் இந்த இன மாட்டுப் பாலை நிறுத்தி வைக்கும் சம்பவம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

A1 & A2 புரத வகை பால்;

மாடுகளில் இரு வகை புரத பால் கிடைக்கின்றது. கலப்பினம் செய்யப்பட்ட மாடுகளில் கிடைக்கும் புரதம் A1 வகை. நாட்டு மாடுகளில் கிடைக்கும் புரதம் A2 வகை.

A1 பாலால் கிடைக்கும் தீமைகள்;

நியூசிலாந்து பண்ணை மேலாண்மை படித்த லிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானி திரு ஹெய்த் உட்போர்டு (keith woodfard) சொல்கிறார்.

1)உயர் இரத்த அழுத்தம்.

2)வயதான காலத்தில் மனநோய்.

3)முறையற்ற வளர்சிதை மாற்ற நோய்(Metabolic degenerative disease).

4)autism எனும் மூளை வளர்ச்சி குன்றிய நோய்.

5)சர்க்கரை நோய் வகை 1 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்.

இத்தனை நோயை உண்டாக்கக் கூடிய நோய் தரும் அட்சயப் பாத்திரம் தான் நாம் குடிக்கும் உயர் ரக மாட்டின் நன்மைகள்.

A2 வகை பாலின் நன்மைகள்:

இந்திய மாட்டு வகைப் பாலில் அமினோ ஆசிட் புரோலின் இருப்பதால் இது A2 வகையாக விஞ்ஞானிகளால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வகைப் பாலால்

1) உடல் பருமன் குறைக்கப்படும்.

2)மூட்டு வலி நிவாரணம் கிட்டும்.

3)ஆஸ்துமா மற்றும் மன நோய் மாற நிவாரணம்.

4)அதிக அளவில் Omega3 இருப்பதால் இரத்தத் தந்துகிகளில் சேரும் கொலஸ்ட்ரால்களைக் கட்டுப்படுத்துகின்றது.

5) A2 பாலில் உள்ள செலிப்ராட்ஸ் மூளை வளர்ச்சியை அதிகமாக்கும்.

6)A2 பாலில் உள்ள ஸ்ட்ரோட்டியம் உடல் ஆரோக்கியத்தைக் கூட்டி கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தாக சிறந்து விளங்குககின்றது.

அழிக்க நினைப்பதன் நோக்கம் :

இதனாலே A2 புரதம் உள்ள இந்திய நாட்டு மாடுகளை அழிக்க வெள்ளைக்காரன் கங்கனம் கட்டி அலைகின்றன்.காளை மாடுகள் இருந்தால் தானே நாட்டு மாடுகள் உற்பத்தி அதிகரிக்கும் என்று கருதி இந்திய வம்சாவளி மாடுகளை மாமிசத்திற்காக லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்து சில ஆயிரங்களாக நம் மாட்டினத்தைக் குறைத்துள்ளனர். நம்மினத்தைக் குறைத்து கலப்பின ஜெர்சி இன விந்துக்களை அதிக அளவில் ஊடுறுவச் செய்து நம்மை மீண்டும் அடிமைகளாக மாற்றுவதே அவர்களின் எண்ணம்.நம் நாட்டில் பால் பீய்ச்ச வேண்டும் என்றால் ஆங்கிலேய ஜெர்சி இன விந்துகளுக்காக பிச்சைக்காரர்கள் போல் கையேந்த வைப்பதே அவர்களின் எண்ணம்.

ஜல்லிக்கட்டும் ரேக்ளாவும்.

விவசாயத்திலும் நாம் மாடுகள் உதவியின்றி இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் காளை மாடுகளின் உதவி வயல் வெளிகளுக்குத் தேவையில்லை என்ற நிலையை எய்தி விட்டோம். பின் நாம் எப்படி காளை மாடுகளை இனவிருத்திக்குந் பயன்படுத்துவது.அதற்காகத் தான் பண்டைய தமிழன் சங்ககாலத்திற்கு முன்னேயே ஏறு தழுவுதல் என்னும் சல்லிக்கட்டை உண்டாக்கி தன் மாட்டினம் அழியாமல் காளைகளைக் காக்கும் கலையை உண்டாக்கினான். பிள்ளை போல் காளைகளை வளர்த்து சல்லிக்கட்டில் தன் வீரத்தையும் நிலைநாட்டினான். இது தெரியாத அந்நியக் கைக்கூலிகள் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று தடை வாங்குவது வேடிக்கையானதே.

தெய்வம் ;

மேல் நாட்டுக்காரர்களைப் போல் காளைகளைப் உண்பவராய் இருந்திருந்தால் ஆடுகள் போல் காளைகளும் உள்நாட்டிலேயே உண்பதற்கு விலை போய் இருக்கும்.ஆனால் தமிழர்கள் நாங்கள் காளைகளையும் பசுக்களையும் தெய்வமாக வணங்குவதால் அவைகளை வளர்த்து சல்லிக்கட்டிற்காக மட்டும் பயண்படுத்தும் தெய்வங்களாக உயர்ந்து நிற்கின்றோம். சல்லிக்கட்டும் நடைபெறாவிட்டால் நமது எஞ்சிய நாட்டு மாட்டினங்களும் அழிந்து A1 வகை புற்று நோய்ப் பாலைத் தான் நமது சந்ததியினரும் பருக வேண்டிய அவல நிலை ஏற்படும்.

நாட்டு மாடுகளில் வேர்வை நாளமும்,திமிலும் இருப்பதால் பசுவின் வெப்பம் இவற்றின் வழியாகவே வெளியேறுகிறது. அதனால் நாட்டு மாடுகள் கொடுக்கும் பால் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும்,சாணம் மற்றும் பசுவின் சிறுநீர் ஊட்டம் பெற்ற உரமாகவும் மாறுகிறது.அதுமட்டுமின்றி,இதன் சாணம் மற்றும் சிறுநீர் கிருமிநாசினியாக வும் பயன்படுகிறது. நாட்டு மாடுகளின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட திருநீரு உடலின் பித்தத்தை அப்படியே எடுத்துவிடும் சிறப்பு மிகுந்தது.

கள்ளக்காதல் பெருகி விட்டது.சிட்டுக்குருவி லேகிய கடைகளும்,வயக்கார மருந்துகளும்,காம இச்சை தரும் மருந்துகளும் பெருகி விட்டது ஏன்?சர்க்கரை நோய்,புற்று நோய்,பெண்கள் குறைந்த வயதில் வயசுக்கு வருதல்,சிறு அகவையிலேயே பெண்களுக்கு மாத விலக்கு, நடுத்தர அகவையிலேயே நின்று விடுகிறது.அதேபோல் தாய்மார்களுக்குக் குறைந்த நாட்களிலேயே பால்சுரப்பு நின்று விடுகிறது இரத்த அழுத்த நோய்கள்,சோம்பேறித்தனம், மலட்டுத்தன்மை என எண்ணில் அடங்க நோய்கள் பெருகிக்கொண்டே போகிறது.இந்த ஏ1 பாலால் தனது மனைவியைக் கூட திருப்தி படுத்த முடியவில்லை.இப்படிப்பட்ட ஏ1 பால் நமக்கு தேவையா?

குற்றத்திலே பெருங்குற்றம் தெரிந்து செய்வது தான்.பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களே! நீங்கள் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை மலடவதை தவிர்ப்பீர்! உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு பாழாய் போக வழிவகை செய்தீர்கள் ஆதலால் நாட்டு மாடு ஒன்றை வளருங்கள்.உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிர வையுங்கள்.

A2 புரத பால் வளர்ச்சிக்காக ரேக்ளா,சல்லிக்கட்டை ஆதரிப்போம்.நோயில்லாத தமிழகம் படைப்போம்.எங்கள் இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி அமெரிக்க கைக் கூலிகளுக்கு மக்கள் கட்சியின் எச்சரிக்கை திருந்துங்கள் இல்லையென்றால் இம்மண்ணின் மக்களால் ஒரு நாள் இம் மண்ணைவிட்டு அகற்றப் படுவீர்கள் இது நிச்சயம் நடக்கும்.

யார் தடை போட்டாலும் நமது பண்பாட்டின் மீது கைவைக்க எவனுக்கும் உரிமையில்லை!இது ஒரு பண்பாடுப்போர் கிளர்ந்தெழு மறத்தமிழா!மண்டியிட்டது போதும் தலைவர்களுக்கும்,தறுதலைகளுக்கும்.ஜல்லிகட்டை நடத்த துப்பில்லாத ஆண்மையற்ற தலைவர்கள் கொண்ட கட்சிகள் எதற்கட இம்மண்ணில் தூக்கி ஏறி ஏரி தழலில் பொசுங்கட்டும்! மீண்டும் சொல்கிறோம் எங்கள் பண்பாட்டின் மீது கைவைக்க எவனுக்கும் உரிமையில்லை! வரும் தைத்திருநாள் அன்று மாறுநாள் ஜல்லிகட்டை நடத்துவோம்! வெள்ளைகார நாய் பீட்டாவை இம்மண்ணை விட்டு அகற்றுவோம்.பண்பாடு,கலாச்சாரம் காப்பதில் மக்கள் கட்சி என்றும் முன்னிலை வகிக்கும்.நடப்பது பாண்பாடுப்போர்.எமது மக்களின் பாண்பாட்டின் மீது கைவைக்கும் கயவர்களுக்கு எதிராக மக்கள் கட்சி பண்பாட்டுப்போர் தொடுக்கும

அனைவரும் ஒன்றிணைவோம் நமது கலாச்சாரம்,பாண்பாடு காக்க +918608572345.+917338873345

Share for Success

Comment

11340

Signatures